உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கெலவரப்பள்ளி அணையில் நீர் திறப்பு 8,000 ஏக்கர் பாசன வசதி பெறும் வாய்ப்பு

கெலவரப்பள்ளி அணையில் நீர் திறப்பு 8,000 ஏக்கர் பாசன வசதி பெறும் வாய்ப்பு

ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே தென்பெண்ணை ஆற்றில் குறுக்கே உள்ள கெலவரப்பள்ளி அணையின் ஷட்டர்கள் மாற்றும் பணியால், கடந்தாண்டு பாசனத்திற்கு தண்ணீர் திறக்கவில்லை. பணிகள் முடிந்த நிலையில், நடப்பாண்டு முதல்போக பாசனத்திற்கு நீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, வலது வாய்க்காலில், 26 கன அடி, இடது வாய்க்காலில், 62 கன அடி என மொத்தம், 88 கன அடி நீரை, மாவட்ட கலெக்டர் சரயு, கிருஷ்ணகிரி, காங்., - எம்.பி., கோபிநாத் ஆகியோர் நேற்று காலை திறந்து வைத்தனர். இதன் வாயிலாக வலது வாய்க்காலில், 2,082 ஏக்கர் நிலமும், இடது வாய்க்காலில், 5,918 ஏக்கர் என மொத்தம் 8,000 ஏக்கர் பாசன வசதி பெறும். அணைக்கு நீர்வரத்தை கருத்தில் கொண்டு, 120 நாட்களுக்கு சுழற்சி முறையில் நீர் திறக்கப்பட உள்ளது.அதன்படி முதல், 10 நாட்களுக்கு தண்ணீர் திறந்தும், அடுத்த, 5 நாட்களுக்கு நீரை நிறுத்தியும், 8 நனைப்புகளுக்கு அடுத்த, 120 நாட்களுக்கு தண்ணீர் வழங்கப்பட உள்ளது. நீரை பயன்படுத்தும், ஓசூர், சூளகிரியை சேர்ந்த மொத்தம், 22 கிராமங்களின் விவசாயிகள், நீரை சிக்கனமாக பயன்படுத்தி விவசாயம் செய்ய, மாவட்ட கலெக்டர் சரயு அறிவுறுத்தி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ