உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / சாலை விபத்தில் தனியார் நிறுவன உரிமையாளர் பலி

சாலை விபத்தில் தனியார் நிறுவன உரிமையாளர் பலி

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் கே.சி.சி., நகரை சேர்ந்தவர் திருமலை, 57. தனியார் நிறுவன உரிமையாளர்; நேற்று முன்தினம் இரவு டி.வி.எஸ்., அப்பாச்சி பைக்கில், கிருஷ்ணகிரியில் இருந்து ஓசூர் நோக்கி சென்றார். சூளகிரி அருகே சாமல்பள்ளம் பகுதியில் உயர்மட்ட மேம்பால பணிகள் நடப்பதால், சர்வீஸ் சாலை அமைத்து வாகனங்கள் திருப்பி விடப்பட்டுள்ளன. அந்த சாலையில் இரவு, 9:30 மணிக்கு சென்றபோது, அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம், அவர் சென்ற பைக் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த திருமலை, சம்பவ இடத்திலேயே பலியானார். சூளகிரி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ