உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / என் பின்னால் இளைஞர்கள் திரள்வதை தடுக்க தமிழ்ப்புதல்வன் திட்டம்; சீமான்

என் பின்னால் இளைஞர்கள் திரள்வதை தடுக்க தமிழ்ப்புதல்வன் திட்டம்; சீமான்

அரூர்: ''என் பின்னால் இளைஞர்கள் திரள்வதை தடுக்க தமிழ்ப்பு-தல்வன் திட்டம் துவங்கப்பட்டுள்ளது,'' என, நாம் தமிழ் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார்.உலக பழங்குடியினர் நாளை முன்னிட்டு, தர்மபுரி மாவட்டம், அரூர் கச்சேரிமேட்டில், நாம் தமிழர் கட்சியின் தமிழ்ப் பழங்குடி-யினர் பாதுகாப்பு பாசறை சார்பில், நேற்றிரவு பொதுக்கூட்டம் நடந்தது. அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது: பள்ளி வகுப்பறை கட்டடங்கள் சீரமைக்கப்படாமல் உள்ளது. ஆசிரியர்களுக்கு ஊதியம் கொடுக்க முடியவில்லை. இந்நி-லையில் பார்முலா, 4 கார்பந்தயம் விளையாட்டு தேவைதானா, கல்லுாரிக்கு செல்லும் பெண்களை குறி வைத்து, 1,000 ரூபாய் வழங்கப்படுகிறது.என் பின்னால் இளம் பெண்கள், இளைஞர்கள் ஆயிரக்க-ணக்கில் திரள்கிறார்கள். நான் என்ன பேசுகிறேன் என்பதை கேட்-பதற்காக கூடுகிறார்கள். என் பின்னால் இளைஞர்கள் திரள்வதை தடுக்க தமிழ்ப்புதல்வன் திட்டம் துவங்கப்பட்டுள்ளது. லோக்சபா தேர்தலில், ஒரு ரூபாய் கொடுக்காமல், 36 லட்சம் ஓட்-டுக்களை நாம்தமிழர் கட்சி பெற்றுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ