உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / மேம்பால தடுப்பு சுவரில் மோதிய லாரி

மேம்பால தடுப்பு சுவரில் மோதிய லாரி

ஓசூர்: கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் இருந்து திருநெல்வேலி மாவட்டத்திற்கு இரும்பு பொருட்களை ஏற்றிய ஈச்சர் லாரி நேற்று அதிகாலை சென்றது. கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி பஸ் ஸ்டாண்ட் எதிரே, தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தின் மீது சென்ற போது, தடுப்புச்சுவரில் லாரி மோதி விபத்துக்குள்ளா-னது. இதில், லாரியை ஓட்டிச் சென்ற மதுரையை சேர்ந்த சூர்யா, 26, என்பவர் படுகாயமடைந்தார். அவரை மீட்ட அக்கம் பக்கத்-தினர், ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். லாரியின் முன்பக்க டயர் வெடித்ததில் டிரைவரின் கட்டுப்-பாட்டை இழந்த லாரி, மேம்பாலத்தின் தடுப்புச்சுவர் மீது மோதி-யது தெரிந்தது. சூளகிரி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி