உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / சாலையை கடந்த 5 யானைகள்

சாலையை கடந்த 5 யானைகள்

சாலையை கடந்த 5 யானைகள்ஓசூர், அக். 19-தேன்கனிக்கோட்டை வனச்சரகம், ஆலஹள்ளி காப்புக்காட்டில், 5 யானைகள் முகாமிட்டிருந்தன. இரவில் வனப்பகுதியில் இருந்து வெளியேறி, விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்ததால், அவற்றை கர்நாடகா வனப்பகுதிக்கு விரட்ட, விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, ஆலஹள்ளி காப்புக்காட்டில் இருந்து யானைகளை பட்டாசு வெடித்து வனத்துறையினர் விரட்டினர். அப்போது, தேன்கனிக்கோட்டை - அஞ்செட்டி சாலையை, மரக்கட்டா கிராமம் அருகே கடந்த, 5 யானைகளும், அடுத்த கரையிலுள்ள வனப்பகுதி நோக்கி சென்றன.யானைகள் சாலையை கடந்ததால், இருபுறமும் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டது. யானைகள் பாதுகாப்பாக சென்ற பின், வாகனங்கள் செல்ல வனத்துறையினர் அனுமதித்தனர். தேன்கனிக்கோட்டை அடுத்த கெண்டகானப்பள்ளி அருகே, 5 யானைகளும் முகாமிட்டுள்ளன. அதனால் விவசாயிகள், கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்க, வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி