மேலும் செய்திகள்
குழிக்காட்டு தோட்டத்தில் இனி, பசுமை செழிக்கும்!
24-Sep-2024
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே, பால-தொட்டனப்பள்ளி கிராமத்தில், நுாற்றாண்டு பழமையான பெரி-யம்மா கோவில் உள்ளது. இதன் வளாகத்தில் மரக்கன்று நட மக்கள் நேற்று குழி தோண்டினர். அப்போது உலோகத்தாலான, 2 அடி நீள சூலாயுதம் கிடைத்தது. மேலும் தோண்டியபோது, 2 அடி உயர உலோக அம்மன் சிலை கிடைத்தது. அவற்றை சுத்தம் செய்து, கோவிலில் வைத்து வழிபட்டனர். தகவலறிந்து சுற்று வட்டார கிராம மக்களும் வந்து, அம்மன் சிலையை வழிபட்டு சென்றனர். இதுகுறித்து தேன்கனிக்கோட்டை வருவாய் துறை-யினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
24-Sep-2024