உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / தரமான விதைகளை விற்பனை செய்ய வேளாண் அலுவலர் வேண்டுகோள்

தரமான விதைகளை விற்பனை செய்ய வேளாண் அலுவலர் வேண்டுகோள்

கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள விதை விற்பனையாளர்கள், நல்ல தரமான விதைகளை விற்பனை செய்ய, விதை பரிசோதனை நிலைய மூத்த வேளாண் அலுவலர் லோகநாயகி அறிவுறுத்தி உள்ளார்.இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: விவசாயிகள் விதை கொள்முதல் செய்யும்போது, விதை விபர அட்டையில் குறிப்பிட்டுள்ள விபரங்களை சரிபார்த்து விதைகளை வழங்க வேண்டும். விதை விபர அட்டையில் காணப்படும் பயிரிட உகந்த பருவம் மற்றும் பயிரிட உகந்த மாநிலம் ஆகிய விபரங்களை சரிபார்க்க வேண்டும். விதை விற்பனையாளர்கள் தாங்கள் விற்பனை செய்யும் விதைக்குவியல்களின் தரமறிந்து விற்பனை செய்ய வேண்டும். விதை கொள்முதல் செய்யும்போது, விற்பனை பட்டியல்களுடன் விதை முளைப்புத்திறன் பகுப்பாய்வு அறிக்கையையும் சரிபாருங்கள். பகுப்பாய்வறிக்கை பெறாத விதைக்குவியல்களில் இருந்து பணிவிதை மாதிரிகள் எடுத்து, பரிசோதனை கட்டணமாக, 80 ரூபாய் செலுத்தி விதைகளின் தரத்தை அறிந்து கொள்ள, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் ஒருங்கிணைந்த வேளாண் அலுவலக விதை பரிசோதனை நிலையத்திற்கு அனுப்பி, பகுப்பாய்வறிக்கையை பெறலாம். விதைக்குவியல்களின் தரமறிந்து நல்ல தரமான விதைகளை விற்பனை செய்ய வேண்டும். இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி