உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / எருது விடும் விழா 15 பேர் மீது வழக்கு

எருது விடும் விழா 15 பேர் மீது வழக்கு

கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி அடுத்த வேட்டியம்பட்டியில், நேற்று முன்தினம் எருது விடும் விழா நடந்தது. இதற்கு மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெறவில்லை. எருதுவிடும் விழா நடத்திய திருப்பதி, 60 மற்றும் 3 பேர் மீது கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.அதேபோல குருபரப்பள்ளி அருகே கொல்லப்பள்ளி, மகராஜகடை, எம்.சி.பள்ளி பகுதிகளில் நேற்று முன்தினம் அனுமதியின்றி எருது விடும் விழாக்கள் நடத்தியதாக கொல்லப்பள்ளி செல்வராஜ், 55 மற்றும் 7 பேர் மீது குருபரப்பள்ளி போலீசாரும், எம்.சி.பள்ளி அம்மாசன், 55 மற்றும் 2 பேர் மீது மகாராஜகடை போலீசாரும் வழக்கு பதிந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை