நாட்டு துப்பாக்கி பறிமுதல் தச்சு தொழிலாளிக்கு காப்பு
அஞ்செட்டி:அஞ்செட்டி அருகே, உரிமம் இன்றி நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்த தச்சுத் தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வனக்கோட்டத்தில் உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கிகளை வைத்து, விலங்குகளை வேட்டையாடுவதை தடுக்க, வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில், அஞ்செட்டி அருகே மரியாளம் கிராமத்தை சேர்ந்த தச்சு தொழிலாளி பசப்பா, 58, உரிமமின்றி இரண்டு நாட்டுத் துப்பாக்கிகளை பதுக்கி வைத்துள்ளதாக, போலீசாருக்கு நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது.அங்கு சென்ற அஞ்செட்டி போலீசார் சோதனை செய்து, இரண்டு நாட்டுத் துப்பாக்கிகளை பறிமுதல் செய்து, பசப்பாவை கைது செய்தனர்.