உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த, 4 நாட்களாக பரவலாக மழை பெய்தது. நேற்று முன்தினம் மாலை மற்றும் இரவில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்தது.நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி, மாவட்டத்தில் அதிகபட்-சமாக கே.ஆர்.பி., அணை பகுதியில், 26.40 மி.மீ., மழை பதி-வாகி இருந்தது. அதேபோல், பாரூர், 20.20, கிருஷ்ணகிரி, 17.40, ராயக்கோட்டை, தளி, ஊத்தங்கரை தலா, 15, நெடுங்கல், 13.60, போச்சம்பள்ளி, 7.20, பெனுகொண்டாபுரம், 5.20, தேன்க-னிக்கோட்டை, 3, ஓசூர், 2 என மொத்தம், 140 மி.மீ., மழை பதி-வாகி இருந்தது.கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணைக்கு நேற்று முன்தினம், 432 கன அடி நீர் வந்து கொண்டிருந்த நிலையில், 4 நாட்களாக பெய்த மழையால், நேற்று நீர்வரத்து, 558 கன அடியாக அதிகரித்தது. அணையிலிருந்து இடது மற்றும் வலதுபுற கால்வாயில், 178 கன அடி, தென்பெண்ணை ஆற்றில், 317 கன அடி என மொத்தம், 495 கன அடிநீர் திறக்கப்பட்டிருந்தது. அணையின் மொத்த உயர-மான, 52 அடியில், நேற்று, 50.50 அடியாக நீர்மட்டம் இருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை