கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக்கல்லுாரியில் சிறப்பு ஒதுக்கீட்டு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடக்கிறது.இது குறித்து கல்லுாரி முதல்வர் அனுராதா வெளியிட்டுள்ள அறிக்கை: நடப்பாண்டில் முதலாண்டு சேர்க்கைக்கு முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு, பழங்குடியினர் உள்ளிட்ட சிறப்பு ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடக்கிறது. இதில் பி.ஏ., (தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளாதாரம்) பி.எஸ்சி., (தாவரவியல், விலங்கியல், கணிதம், இயற்பியல், வேதியல், கணினி, மைக்ரோ பயாலஜி) உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் முதலாமாண்டுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு கலந்தாய்வு வரும், 30ல் நடக்கிறது. சிறப்பு ஒதுக்கீடு மாணவர்களுக்கான தரவரிசை பட்டியல் www.gacmenkrishnagiri.org என்ற இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. கலந்தாய்வில் கலந்து கொள்ள வரும் மாணவர்கள், இணையதளத்தில் விண்ணப்பித்த படிவம், மாற்றுச்சான்றிதழ் (EMIS எண்ணுடன்), மதிப்பெண் சான்றிதழ்கள், ஜாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், சிறப்புப் பிரிவினருக்கான சான்றிதழ்கள், ஆதார், வங்கி கணக்கு புத்தக முதல் பக்க நகல் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் வர வேண்டும். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.