| ADDED : ஜூன் 21, 2024 07:17 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி தாலுகா அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தியில், வீட்டுமனை பட்டா கோரி பொதுமக்கள் மனு அளித்தனர்.கிருஷ்ணகிரி மாவட்டத்தின், 8 வட்டங்களிலும் கடந்த, 14ல் ஜமாபந்தி தொடங்கி நடந்து வருகிறது. கிருஷ்ணகிரி தாலுகா அலுவலகத்தில் நேற்று நடந்த ஜமாபந்தியில், வேப்பனஹள்ளி ஒன்றியம், மாதேப்பள்ளி அடுத்த பந்திகுறியை சேர்ந்த, 100க்கும் மேற்பட்டோர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:பந்திகுறி கிராமத்தில், 300 ஆதிதிராவிட குடும்பங்களை சேர்ந்த, 1,500க்கும் மேற்பட்டோர் வசிக்கிறோம். இங்கு ஒரே வீட்டில், 3 முதல், 4 குடும்பங்களை சேர்ந்த, 10க்கும் மேற்பட்டோர் வசிக்கிறோம். அரசு வழங்கும் இலவச வீட்டுமனை வழங்கக்கோரி மாவட்ட கலெக்டரிடம் தொடர்ந்து மனு அளித்தும் பயனில்லை. எனவே, எங்களுக்கு உடனடியாக இலவச வீட்டுமனை மற்றும் பட்டா வழங்கி நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளனர்.