உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / டிராக்டர் திருடிய இருவருக்கு காப்பு

டிராக்டர் திருடிய இருவருக்கு காப்பு

ஓசூர்:ஓசூர் அருகே ஆலுாரை சேர்ந்தவர் ரவீந்திரா, 48, விவசாயி; கடந்தாண்டு டிச., 9 இரவு, 10:00 மணிக்கு, அப்பகுதியிலுள்ள கோழிப்பண்ணை பின்புறம், தன் டிராக்டரை நிறுத்தியிருந்தார். மறுநாள் காலையில் டிராக்டர் திருடு போனது. ரவீந்திரா புகார்படி, ஹட்கோ போலீசார் விசாரித்தனர். இதில், தேன்கனிக்கோட்டை அருகே நந்திமங்கலத்தை சேர்ந்த முனிராஜ், 26, கர்நாடகா மாநிலம், ஆனைக்கல் அருகே குண்டனஹள்ளி பகுதியை சேர்ந்த சதீஷ், 27, ஆகியோர் திருட்டில் ஈடுபட்டது தெரிந்தது. அவர்கள் இருவரையும், நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ