உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கால்வாய் தோண்டியபோது சித்தர் கற்சிலை கண்டெடுப்பு குடியாத்தம், மே 14

கால்வாய் தோண்டியபோது சித்தர் கற்சிலை கண்டெடுப்பு குடியாத்தம், மே 14

குடியாத்தத்தில் கழிவுநீர் கால்வாய் அமைக்க பள்ளம் தோண்டியபோது, 2 அடி உயர சித்தர் கற்சிலை கண்டெடுக்கப்பட்டது. வேலுார் மாவட்டம், குடியாத்தம், புவனேஸ்வரிபேட்டை பாலவிநாயகர் கோவில் தெருவில், கடந்த சில நாட்களாக கழிவுநீர் கால்வாய் கட்டும் பணி நடந்து வருகிறது. நேற்று கால்வாய் அமைக்க தொழிலாளர்கள் பள்ளம் தோண்டிபோது, 2 அடி உயர சித்தர் கற்சிலையை கண்டெடுத்தனர். இத்தகவல் பரவி மக்கள் கூடினர். பின், அச்சிலையை நீரால் சுத்தம் செய்து தீபாராதனை செய்து வழிபட்டனர். அச்சிலைக்கு அப்பகுதியில் கோவில் கட்டி, வழிபாடு நடத்த உள்ளதாக, அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை