3ல் வரட்டனப்பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்
கிருஷ்ணகிரி: வரட்டனப்பள்ளியில் வரும், 3ல், 'நலம் காக்கும் ஸ்டாலின்' மருத்துவ முகாம் நடக்கிறது.இது குறித்து, மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை:கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் வட்டம், வரட்ட-னப்பள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் வரும், 3ல், 'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்ட மருத்துவ முகாம் நடக்கிறது. காலை, 9:00 மணி முதல் மாலை, 5:00 மணி வரை நடக்கும் முகாமில், ரத்த பரிசோதனை, கர்ப்பிணிகளுக்கு ஸ்கேன், சிறுநீரகம், இதயம், மற்றும் நரம்பியல் மருத்துவம், கண் பார்வை உள்ளிட்ட, 17 வகையான சிறப்பு நிபுணர்களை கொண்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளது.மேலும், முதல்வர் காப்பீடு அட்டை, மாற்றுத்திற-னாளிகள் மற்றும் தொழிலாளர்களுக்கும் இலவச அடையாள அட்டை வழங்கப்படுகிறது. இதில், பொதுமக்கள் கலந்து கொள்ளலாம். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.