புள்ளியியல் துறையினர் ஏரியில் துாய்மை பணி
தர்மபுரி,இந்திய அரசின் தேசிய புள்ளியியல் துறையின் சார்பில், சிறப்பு துாய்மை இயக்கத்தின், 5.0வை -முன்னிட்டு, நேற்று, தர்மபுரி துணை மண்டல தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் சார்பாக, தர்மபுரி டவுனில் உள்ள ராமக்காள் ஏரியை தேர்ந்தெடுத்து, அதில், துப்புரவு பணி மேற்கொண்டனர். இதில், தர்மபுரி துணை மண்டல அலுவலகத்தின் தலைமை அலுவலர் மதிவாணன் மற்றும் துணை மண்டல அலுவலகத்தின் களப்பணியாளர்கள் கலந்து கொண்டனர்.