உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / சம்பா நெல் பயிர் காப்பீட்டிற்கு வரும் 31ம் தேதி கடைசி நாள்

சம்பா நெல் பயிர் காப்பீட்டிற்கு வரும் 31ம் தேதி கடைசி நாள்

ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் காளிமுத்து வெளியிட்டுள்ள அறிக்கை:கிருஷ்ணகிரி மாவட்டத்தில், சம்பா சிறப்பு பருவ நெல் பயிருக்கு காப்பீடு செய்ய வரும், 31ம் தேதி கடைசி நாளாகும். ஒரு ஏக்கருக்கான பயிர் காப்பீட்டு தொகை, 38,300 ரூபாய். அதற்கு விவசாயிகள் ஏக்கருக்கு, 574.50 ரூபாயை காப்பீட்டு கட்டணமாக செலுத்த வேண்டும். இத்திட்டத்தில் விவசாயிகள் பதிவு செய்யும் போது, முன்மொழிவு விண்ணப்பம், பதிவு விண்ணப்பம், வி.ஏ.ஓ., வழங்கும் நடப்பு பசலிக்கான அடங்கல், வங்கி கணக்கு புத்தக முதல் பக்க ஜெராக்ஸ், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து, கட்டண தொகையை செலுத்தி, அதற்கான ரசீதை பொது சேவை மையங்களில் பெற்று கொள்ளலாம்.மேலும் விபரங்களுக்கு, தங்களது வட்டாரத்தில் உள்ள வேளாண்மை உதவி இயக்குனர்களை தொடர்பு கொள்ளலாம். அல்லது 14447 என்ற கட்டணமில்லா எண்ணிலும் தொடர்பு கொண்டு சந்தேகங்களை கேட்டு தெளிவு பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ