உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / யானைமலை அடிவாரத்தில் வேலி அமைப்பது எப்போது உயர்நீதிமன்றம் கேள்வி

யானைமலை அடிவாரத்தில் வேலி அமைப்பது எப்போது உயர்நீதிமன்றம் கேள்வி

மதுரை: ஒத்தக்கடை யானைமலை அடிவாரத்தில் குவாரி பள்ளங்களில் விபத்துக்களை தடுக்க எவ்வளவு கால வரம்பிற்குள் வேலி அமைக்கப்படும் என்பது குறித்து கலெக்டர் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.ஒத்தக்கடை அப்துல் ரகுமான் ஜலால் தாக்கல் செய்த பொதுநல மனு: யானைமலை அடிவாரத்தில் நரசிங்கப்பெருமாள் கோயில் உள்ளது. அருகிலுள்ள பாறையில் கல்குவாரி நடத்த சில ஆண்டுகளுக்கு முன் அரசு அனுமதித்தது. வெடி வைத்து அதிக ஆழத்தில் கற்கள் எடுக்கப்பட்டன. தற்போது குவாரி செயல்படவில்லை. அப்பள்ளத்தில் குளம்போல் தண்ணீர் தேங்கியுள்ளது. 2023ல் கோயிலுக்கு வந்த திண்டுக்கல்லை சேர்ந்த 2 பெண்கள் மூழ்கி இறந்தனர். பள்ளத்தை சுற்றிலும் வேலி அமைத்து, எச்சரிக்கை பலகை நிறுவ உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கவுரி அமர்வு விசாரித்தது.அரசு தரப்பு வழக்கறிஞர்: ரூ.30 லட்சத்தில் வேலி அமைக்க அரசுக்கு திட்ட அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவித்தார்.நீதிபதிகள்: எவ்வளவு கால வரம்பிற்குள் வேலி அமைக்கப்படும் என்பது குறித்து கலெக்டர், கனிமவளத்துறை துணை இயக்குனர், மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் செப்.26ல் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ