உள்ளூர் செய்திகள்

பொங்கல் விழா

பாலமேடு: பாலமேடு வடக்குவாசல் செல்லாயி அம்மன், வலம்புரி சக்தி விநாயகர் கோயில் பொங்கல் உற்ஸவம் அம்மனுக்கு சாட்டுதலுடன் நேற்று துவங்கியது.அம்மன், சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளை தொடர்ந்து பக்தர்கள் காப்பு கட்டினர். ஜூன் 7 காலை விளக்கு பூஜை, மாலை 6:00 மணிக்கு ஆண்கள் மட்டும் பொங்கல் பானை சுமந்து அம்மன் கோயில் செல்லுதல், ஜூன் 8 மஞ்சக்கருப்பு சுவாமிக்கு அபிஷேகம், அம்மனுக்கு பால்குடம் நேர்த்திக்கடன் செலுத்துதல், ஜூன் 9 காலை அம்மனுக்கு பழக்கூடை எடுத்து ஊர்வலமாக கோயில் செல்லுதல், மாலை 4:00 மணிக்கு செல்லாயி அம்மன் நகை பெட்டியுடன் கோவில் வீடு வருதல் நடைபெறும். தினமும் இரவு கலை நிகழ்ச்சி நடக்கிறது.பேரையூர்: பேரையூர் தாலுகா சேர்வராயன்பட்டி காளியம்மன் கோயில் பொங்கல் விழா 3 நாட்களாக நடந்தது. கரகம் எடுத்தல், பொங்கல் வைத்தல், கிடா வெட்டுதல், முளைப்பாரி எடுத்தல் நடந்தன. ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை