உடல் நலக்குறைவால் கோயில் காளை பலி
மேலுார்: பெரிய கற்பூரம்பட்டி திரணி கருப்பன் கோயில் காளை நேற்று உடல்நலக்குறைவால் இறந்தது. இக்காளை ஜல்லிக்கட்டு போட்டிகளில் வெற்றி பெற்று கிராமத்திற்கு பெருமை சேர்த்தது. இறந்த காளையை கிராம மக்கள் அலங்காரம் செய்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கொண்டு சென்று மந்தையில் அடக்கம் செய்தனர்.