உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஒரு போன் போதுமே

ஒரு போன் போதுமே

வீதிகளில் கழிவுநீர்மதுரை அம்மன் சன்னதி, வடக்கு சித்திரை வீதி சந்திப்பு பகுதி ரோட்டில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. பக்தர்கள் இப்பகுதியில் செல்ல முடியவில்லை. குப்பையை மாநகராட்சியினர் அகற்றினாலும் கழிவுநீர் தேங்கி நிற்கிறது.-சிவராமநாதன், விளக்குத்துாண், மதுரை.வேகத்தடை தேவைகுலமங்கலம் மெயின் ரோடு, பனங்காடி , வாகைக்குளம் நுழைவுவாயில் சந்திக்கும் பகுதியில் அடிக்கடி வாகன விபத்து நடக்கிறது. இந்த ரோட்டில் வேகத்தடை அமைக்க வேண்டும்.- மூகாம்பிகை, அன்பு நகர்.பாம்புகள் தொல்லைமதுரை மாநகராட்சி வார்டு 36 முகவை தெருவின் கடைசியில் உள்ள காலி பிளாட்டுகளில் குப்பையைக் கொட்டுகின்றனர். காய்கறிக் கழிவு, சமையல் கழிவுகள் குவிந்து கிடப்பதால் பாம்புகள் உலா வருகின்றன.- நாகசுப்பிரமணி, கோமதிபுரம்.பாதாள சாக்கடை அடைப்புமதுரை மாநகராட்சி வார்டு 22 மீனாட்சி நகர் 5வது தெருவில் பாதாள சாக்கடை குழாய் அடைப்பு ஏற்பட்டு ரோடுகளில் செல்கிறது. துர்நாற்றம் அதிகமாக இருப்பதால் இப்பகுதியில் செல்ல முடியவில்லை. உடனே நடவடிக்கை தேவை.-ராம்பாபு, விளாங்குடி.சேதமடைந்த ரோடுசிம்மக்கல் காமாட்சிபுரம் அக்ரஹாரத்தில் இருந்து அனுமார் கோயில் செல்லும் வழியில் வாய்க்கால் பகுதி பாதை சேதமடைந்து உள்ளது. இவ்வழியில் ஆட்டோ கூட வருவதில்லை என்பதால் உடனே சரிசெய்ய வேண்டும்.- ஆனந்தலட்சுமி, காமாட்சிபுர அக்ரஹாரம், சிம்மக்கல்.ரோட்டில் குப்பைசெக்கானுாரணி வள்ளி நகர் வீதி நுழைவாயிலில் குப்பையை கொட்டுகின்றனர். அருகில் பள்ளி, கோயில்கள் உள்ளது. கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது.- ராஜபாண்டி, செக்கானுாரணி.இடையூறு மின்மாற்றிமதுரை வண்டியூர் சவுராஷ்டிராபுரம் 13 வது தெருவில் பல ஆண்டுகளாக நுழைவாயிலில் மின்மாற்றி இடையூறாக உள்ளது. வேறிடத்தில் மாற்றி அமைக்க பல முறை மனுக்கள் கொடுத்தும் அதிகாரிகள் நடவடிக்கை இல்லை.- சீனிவாசன், அனுமார்பட்டிதுர்நாற்றம் தரும் ரோடுமதுரை தெப்பக்குளம் காமராஜர் சாலை பதினாறு கால் மண்டபம் அருகே துர்நாற்றத்துடன் தண்ணீர் தேங்கி நிற்கிறது. பஸ் , ஆட்டோவுக்கு நிற்க முடியவில்லை. மாநகராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-பிரியா, தெப்பக்குளம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை