உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  பயிர்காப்பீடுக்கு நவ.30 கடைசி

 பயிர்காப்பீடுக்கு நவ.30 கடைசி

திருப்பரங்குன்றம்: 'திருப்பரங்குன்றம் வட்டார விவசாயிகள் சிறப்பு ராபி பருவத்தில் பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம்' என வேளாண் உதவி இயக்குனர் மீனாட்சி சுந்தரம் தெரிவித்தார். அவர் கூறியதாவது: இத்திட்டத்தில் நெல் சம்பா பயிருக்கு ஏக்கருக்கு ரூ.540 வீதம் பிரிமியத்தொகை செலுத்தினால், இயற்கை இடர்பாடுகளால் பாதிப்பு ஏற்பட்டால் காப்பீட்டுத் தொகை ரூ. 36 ஆயிரம் கிடைக்கும். சொந்தநிலம், குத்தகை நிலம் உள்ளவர்கள் சிட்டா, அடங்கல், வங்கி பாஸ் புத்தகம் முதல் பக்க நகல், ஆதார் எண்ணுடன் இ சேவை மையம், தேசிய வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் தொகையை செலுத்தலாம். காப்பீடு செய்ய நவ.30 கடைசி, என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை