உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / வழிகாட்டுதல் கூட்டம்

வழிகாட்டுதல் கூட்டம்

பேரையூர், : பேரையூர் பகுதியில் விநாயகர் சிலைகள் அமைப்பது மற்றும் ஊர்வலம் நடத்துவதற்கான விழிப்புணர்வு கூட்டம் பேரையூரில் நடந்தது. இதில் உசிலம்பட்டி சப் கலெக்டர் உட்கர்ஷ்குமார், பேரையூர் ஏ. எஸ்.பி., அஸ்வினி தலைமை வகித்தனர். தாசில்தார் செல்லப்பாண்டி முன்னிலை வகித்தார். அவர்கள் கூறியதாவது: சதுர்த்தி விழா முடிந்து நீரில் சிலையை கரைக்கச் செல்லும் போது மட்டுமே ஊர்வலம் நடத்த வேண்டும். தகர செட்டில் மட்டுமே சிலைகளை வைக்க வேண்டும். விழாவில் ஒலிபெருக்கி அமைக்க சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் அனுமதி பெற வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை