அடையாள அட்டை பெற அறிவுறுத்தல்
பேரையூர்: வேளாண் உதவி இயக்குனர் விமலா கூறியதாவது: விவசாயிகளின் ஒருங்கிணைப்புக்காக அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது. வேளாண் விரிவாக்க மையம் மற்றும் இ-சேவை மையங்களில் முகாம் நடக்கிறது.வரும் காலங்களில் அடையாள அட்டை இருந்தால் மட்டுமே விவசாயக் கடன், மத்திய மாநில அரசு திட்டங்களின் பலன் பெற முடியும். அனைத்து விவசாயிகளும் பதிவு செய்ய வேண்டும் என்றார்.