உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கீழ்பவானி பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு குறைப்பு

கீழ்பவானி பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு குறைப்பு

கீழ்பவானி பாசனத்திற்குதண்ணீர் திறப்பு குறைப்புபுன்செய்புளியம்பட்டி, டிச. 1-பவானிசாகர் அணையில் இருந்து பாசனத்துக்கு, கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 2,300 கன அடி நீர் தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் முதல், படிப்படியாக குறைக்கப்பட்டு, 1,000 கன அடி நீர் நேற்று காலை வெளியேற்றப்பட்டது. அதேசமயம் அரக்கன் கோட்டை-தடப்பள்ளி பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. நேற்று மாலை அணை நீர்மட்டம், 97.38 அடி; நீர் இருப்பு, 26.7 டி.எம்.சி.,யாக உள்ளது. அணைக்கு, 2,083 கன அடி நீர் வரத்தானது. மாவட்டத்தில் பரவலாக மழை பெய்ததால், நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில் இரவில் நீர் திறப்பு, 500 கனஅடியாக குறைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை