உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஓய்வு தலைமையாசிரியர் டூவீலர் விபத்தில் பலி

ஓய்வு தலைமையாசிரியர் டூவீலர் விபத்தில் பலி

சோழவந்தான்: சோழவந்தானைச் சேர்ந்தவர் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய அ.தி.மு.க., இலக்கிய அணி செயலாளர் தருமர் மகன் மணி 79. ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரான இவர் சோழவந்தான் --- வாடிப்பட்டி ரோட்டில் உள்ள பெட்ரோல் பங்கில் இருந்து டூவீலர் ஓட்டிக்கொண்டு வெளியேறியுள்ளார். அப்போது ஆலங்கொட்டாரத்தை சேர்ந்த சிங்கராஜ் 20, வாடிப்பட்டியில் இருந்து சோழவந்தானுக்கு டூவீலரில் சென்றார். இரு டூவீலர்களும் மோதியதில் மணி சம்பவ இடத்திலேயே பலியானார். சிங்கராஜ் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ