உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மயிலாடுதுறை / டாஸ்மாக்கில் மது குடித்தவர் மயங்கி சாவு

டாஸ்மாக்கில் மது குடித்தவர் மயங்கி சாவு

மயிலாடுதுறை:மயிலாடுதுறை, சேந்தங்குடியைச் சேர்ந்தவர் கனகராஜ், 35. இவர் தன் உறவினர் செல்வகுமாருடன் சீர்காழி அருகே கொண்டத்துாரில் தங்கி செங்கல் சூளையில் கல் அறுக்கும் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு, இருவரும் கதிராமங்கலம் அரசு டாஸ்மாக் கடையில், மது வாங்கி அருந்திவிட்டு திரும்பினர்.அப்போது கனகராஜ் திடீரென மயக்கமடைந்ததார். சம்பவ இடத்திற்கு வந்த, 108 ஆம்புலன்ஸ் உதவியாளர், கனகராஜை பரிசோதித்து அவர் ஏற்கனவே இறந்ததை உறுதி செய்தார்.தகவலறிந்த வைத்தீஸ்வரன் கோவில் போலீசார், கனகராஜ் உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக, சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி