மேலும் செய்திகள்
வி.ஏ.ஓ., கொலையில் 2 திருநங்கையர் கைது
10-Nov-2025
முகம் சிதைக்கப்பட்ட நிலையில் வி.ஏ.ஓ., கொடூர கொலை
09-Nov-2025
நாகை மீனவர்கள் 31 பேர் சிறைபிடிப்பு
04-Nov-2025
அரட்டை செயலியில் புதிய அப்டேட்: ஸ்ரீதர் வேம்பு
29-Oct-2025 | 1
நாகப்பட்டினம்: நாகை மாவட்டம், தேமங்கலத்தை சேர்ந்தவர் குணா, 37. திட்டச்சேரி, போலீஸ் ஸ்டேஷனில் போலீஸ்காரராக பணியாற்றினார். கடந்த 30ம் தேதி, நாகையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றவர், உறவுக்கார 16 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து சிறுமி, நாகை, குழந்தைகள் நல குழுமத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். குழந்தைகள் நல குழுமத்தினர் அளித்த புகாரின் படி, மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து போலீஸ்காரரை கைது செய்தனர். இதையடுத்து அவர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார். நேற்று எஸ்.பி., செல்வகுமார், போலீஸ்காரர் குணாவை 'டிஸ்மிஸ்' செய்து உத்தரவிட்டார்.
10-Nov-2025
09-Nov-2025
04-Nov-2025
29-Oct-2025 | 1