உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / தேசிய வேளாண்மை சந்தையில் ரூ.1.12 லட்சத்துக்கு தேங்காய் ஏலம்

தேசிய வேளாண்மை சந்தையில் ரூ.1.12 லட்சத்துக்கு தேங்காய் ஏலம்

ப.வேலுார் : ப.வேலுார் தேசிய வேளாண்மை சந்தையில், நேற்று, 1.12 லட்சம் ரூபாய்க்கு தேங்காய் வர்த்-தகம் நடந்தது.நாமக்கல் மாவட்டம், ப.வேலுாரில் மின்னணு தேசிய வேளாண்மை சந்தை செயல்பட்டு வருகி-றது. இங்கு, வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை தேங்காய் ஏலம் நடக்கிறது. ப.வேலுார், மோகனுார், பொத்தனுார், பாண்டமங்கலம், வெங்கரை, கபிலர்மலை பகுதி விவசாயிகள், தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வரு-கின்றனர். நேற்று நடந்த ஏலத்திற்கு, 13,815 தேங்-காய்கள் வரத்தாகின. கடந்த வாரம், நடந்த ஏலத்தில் அதிகபட்சம் கிலோ, 23.89 ரூபாய், குறைந்தபட்சம், 20.50 ரூபாய், சராசரி, 22.29 ரூபாய் என, மொத்தம், 1.31 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது. நேற்று நடந்த ஏலத்தில் அதிகபட்சம் கிலோ, 24.19 ரூபாய், குறைந்தபட்சம், 20.19 ரூபாய், சராசரி, 23.79 ரூபாய் என, மொத்தம், 1.12 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை