உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / இலவச பட்டா கேட்டு மா.திறனாளிகள் போராட்டம்

இலவச பட்டா கேட்டு மா.திறனாளிகள் போராட்டம்

ப.வேலுார் : இலவச வீட்டுமனை பட்டா கேட்டு, ப.வேலுார் தாசில்தார் அலுவலகம் முன், மாற்றுத்திறனா-ளிகள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். நாமக்கல் மாவட்ட மாற்றுத்திறனாளிகளின் கூட்டமைப்பு தலைவர் பழனிவேல், செயலாளர் கதிர்வேல், பொருளாளர் ஈஸ்வரன் தலை-மையில், 40க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனா-ளிகள் இலவச வீட்டுமனை பட்டா கேட்டு, ப.வேலுார் தாசில்தார் அலுவலகம் முன் காத்தி-ருப்பு போராட்டம் நடத்தினர். திருச்செங்கோடு ஆர்.டி.ஓ., சுகந்தி, ப.வேலுார் தாசில்தார் முத்துக்-குமார், இன்ஸ்பெக்டர் ரங்கசாமி ஆகியோர் பேச்-சுவார்த்தை நடத்தினர். 'இலவச வீட்டு மனை பட்டா கிடைக்க விரைவில் ஏற்பாடு செய்கிறேன்' என, திருச்செங்கோடு ஆர்.டி.ஓ., சுகந்தி உத்தர-வாதம் அளித்ததையடுத்து, மாலை, 4:00 மணிக்கு மாற்றுத்திறனாளிகள் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ