உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / குண்டும், குழியுமாக மாறிய பெருமாள் கோவில் சாலை

குண்டும், குழியுமாக மாறிய பெருமாள் கோவில் சாலை

எருமப்பட்டி: எருமப்பட்டி யூனியன், அலங்காநத்தத்தில் இருந்து பெருமாள் கோவில் கரட்டிற்கு செல்லும் தார்ச்சாலை உள்ளது. கடந்த, 10 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட இந்த தார்ச்சாலையில், இப்பகுதி விவசாயிகள், விவசாய பணிகளுக்காக பயன்படுத்தி வருகின்றனர்.இந்நிலையில், இந்த சாலை கடந்த, 2 ஆண்டுகளுக்கும் மேலாக குண்டும், குழியுமாக மாறி உள்ளது. இதனால், உழவர் சந்தைக்கு காய்கறிகள் கொண்டு செல்லவும், மாணவர்கள் பள்ளிக்கு வந்து செல்லவும் கடும் அவதிப்படுகின்றனர். எனவே, பஞ்., நிர்வாகம், புதிய தார்ச்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Vathsan
ஜூன் 18, 2024 15:00

பாண்டிச்சேரியில் ரோடுகள் மிகவும் குண்டும் குழியுமாக உள்ளது. பெரும்பாலான இடங்களில் ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ளன. மாநில அரசும் ஆளுநரும் தூக்கத்தில் இருந்து விழிப்பார்களா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை