உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ஆடி முதல் நாளையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு

ஆடி முதல் நாளையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு

குமாரபாளையம்: ஆடி முதல் நாள் மற்றும் ஆஷாட சுத்த சயன ஏகாதசி மகோற்சவ நாளையொட்டி, குமாரபாளையம் விட்டலபுரி பாண்டுரங்கர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதையொட்டி, நேற்று முன்தினம் கொடியேற்று விழா நடந்தது. நேற்று காலை, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆரா-தனை, சிறப்பு பூஜை நடந்தது. இன்று காலை காவிரி ஆற்றிலி-ருந்து தீர்த்தக்குடம் எடுத்து வருதல், கருட தரிசனம் நடக்கிறது.இதேபோல், அனைத்து சமூக காளியம்மன் கோவில், கோட்டை-மேடு காளியம்மன் கோவில், சேலம் சாலை, ராஜா வீதி சவுண்-டம்மன் கோவில், அம்மன் நகர் எல்லை மாரியம்மன் கோவில், அங்காளம்மன் கோவில், மாரியம்மன் கோவில், திருவள்ளுவர் நகர் மங்களாம்பிகை கோவில், வாசுகி நகர் சக்தி மாரியம்மன் கோவில், நேதாஜி நகர் சந்தோசி அம்மன் கோவில், அக்ரஹாரம் காசி விஸ்வேஸ்வரர் கோவில், பட்டத்தரசியம்மன் கோவில், தட்டான்குட்டை ஜெய்ஹிந்த் நகர் புருஷோத்தம பெருமாள் கோவில், கள்ளிப்பா-ளையம் மாரியம்மன், காளியம்மன் கோவில், பண்ணாரி மற்றும் சமயபுரம் மாரியம்மன் கோவில்களில் சுவாமிகளுக்கு சிறப்பு அபி-ஷேகம், ஆராதனை நடத்தப்பட்டது. பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை