உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / துவரை சாகுபடி செய்ய மானியம்

துவரை சாகுபடி செய்ய மானியம்

ராசிபுரம்: ராசிபுரம் வட்டாரத்தில் துவரை சாகுபடி செய்ய மானியம் வழங்கப்படுகிறது.ராசிபுரம் வேளாண் உதவி இயக்குனர் சுதாகர் வெளியிட்டுள்ள அறிக்கை:ராசிபுரம் வட்டாரத்தில் வேளாண்மை துறையின் மூலம் துவரை சாகுபடி பரப்பை அதிகரிக்கும் நோக்கத்தில் பல்வேறு திட்டங்-களை செயல்படுத்தி வருகின்றனர்.மாநில வேளாண் வளர்ச்சித் திட்டத்தில், துவரை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு, 50 சதவீத மானியத்தில் விதை, உயிர் உரம், உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகள், உள்ளிட்ட இடுபொ-ருள்கள் வழங்க உள்ளது. ஆகவே ராசிபுரம் வட்டார விவசாயிகள் நிலக்கடலை பயிருடன் துவரை பயிரை ஊடுபயிராக பயிரிட்டு பயன் அடையலாம். ஆர்வமுள்ள விவசாயிகள் ராசிபுரம் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தை தொடர்பு கொண்டு அல்லது அந்தந்த பகுதி உதவி வேளாண்மை அலுவலரை தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம்.இவ்வாறு கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை