உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / கிரிக்கெட் விளையாட்டில் மயங்கி விழுந்தவர் சாவு

கிரிக்கெட் விளையாட்டில் மயங்கி விழுந்தவர் சாவு

ப.வேலுார், ஆக. 22---பரமத்தி, பஜனைமட தெருவை சேர்ந்தவர் குருநாதன், 42; சிவில் இன்ஜினியர். இவர், நேற்று காலை, 7:30 மணிக்கு பரமத்தி அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில், நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி கீழே விழுந்தார். அருகில் இருந்தவர்கள் மீட்டு, ப.வேலுார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், குருநாதன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். பரமத்தி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை