உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / வைகுண்ட ஏகாதசிக்கு 20,000 லட்டு தயாரிப்பு

வைகுண்ட ஏகாதசிக்கு 20,000 லட்டு தயாரிப்பு

குமாரபாளையம்; குமாரபாளையம், விட்டலபுரி பாண்டுரங்கர் கோவிலில், வைகுண்ட ஏகாதசி விழா, வரும், 29ல் கொடியேற்றத்துடன் துவங்கவுள்ளது.இதையடுத்து பஜனை ஊர்வலம், சுவாமிக்கு மகா தீபாராதனை நடைபெறவுள்ளது. 30ல் பரமபத வாசல் எனும் சொர்க்க வாசல் திறப்பு வைபவம், அதிகாலை, 5:00 மணிக்கு நடக்கிறது. அதை-யொட்டி, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிர-சாதமாக லட்டு வழங்க, 20,000 லட்டு தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.வைகுண்ட ஏகாதசி விழா ஏற்பாடுகளை, தக்கார் வடிவுக்கரசி, செயல் அலுவலர் குணசேகரன், பாண்டுரங்கர் திருக்கோவில் விழாக்குழுவினர் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்