உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / 543 கிலோ பட்டுக்கூடு ரூ.1.93 லட்சத்திற்கு ஏலம்

543 கிலோ பட்டுக்கூடு ரூ.1.93 லட்சத்திற்கு ஏலம்

ராசிபுரம்: ராசிபுரத்தில் கூட்டுறவு பட்டுக்கூடு விற்பனை நிலையம் உள்ளது. இங்கு தினசரி பட்டுக்கூடு விற்பனை நடந்து வருகிறது. நாமக்கல், கரூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து பட்டு விவசாயிகள் ராசிபுரத்திற்கு வந்து பட்டுக்கூடுகளை விற்பனை செய்து வருகின்றனர். நேற்று, 543.7 கிலோ பட்டுக்கூடு விற்பனையானது. இதில், அதிகபட்சம் கிலோ, 432 ரூபாய், குறைந்தபட்சம், 250 ரூபாய், சராசரி, 355.94 ரூபாய் என, 543 கிலோ பட்டுக்கூடு, 1.93 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ