உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ராசிபுரத்தில் 63 நாயன்மார் விழா

ராசிபுரத்தில் 63 நாயன்மார் விழா

ராசிபுரம்: ராசிபுரத்தில், 'வல்வில் ஓரி'யால் கட்டப்பட்ட அறம்வளர்த்த நாயகி உடனமர் கைலாசநாதர் கோவில் உள்ளது. இக்கோவிலில் உள்ள, 63 நாயன்மார்களுக்கு ஆடி மாதத்தில் விழா எடுத்து வருகின்றனர். அறுபத்து மூவர் பெருவிழா என்ற பெயரில் இவ்விழாவை கைலாசநாதர் சிவனடியார் திருகூட்ட அறக்கட்டளையினர், மூன்று நாட்கள் நடத்தி வருகின்றனர். முதல் நாள் விழா, நேற்று முன்தினம் மாலை, 5:00 மணிக்கு குறும்ப நாயனார் குருபூஜையுடன் தொடங்கியது. நேற்று காலை, 7:00 மணிக்கு விநாயகர், முருகன், நந்திபெருமான் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு திருமஞ்சன வழிபாடு நடந்தது. மாலை, 6:00 மணிக்கு, கைலாசநாதர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.இன்று காலை, 8:00 மணிக்கு, கோவிலில் இருந்து பன்னிரு திருமுறைகள் அடியார் பெருமக்களை கைலாய வாத்தியம் முழங்க ஊர்வலமாக அரிமா சங்க மண்டபத்திற்கு கொண்டு வருதல்; 9:00 மணிக்கு திருவிளக்கு ஏற்றுதல்; மாலை, 5:00 மணிக்கு, 63 நாயன்மார்கள் திருவீதி உலா நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை