உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மணல் கடத்திய ஆட்டோ பறிமுதல்

மணல் கடத்திய ஆட்டோ பறிமுதல்

மோகனுார்: மோகனுார் அடுத்த நவலடியான் கோவில் பின்புறம், காவிரி-யாற்றில் மணல் கடத்துவதாக போலீசருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி, மோகனுார் எஸ்.ஐ., கவிப்பிரியா தலைமையிலான போலீசார், அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்-போது மினி ஆட்டோவில் சாக்கு மூட்டையில் மணல் இருந்-ததை கண்டுபிடித்தனர். போலீசார் வருவதை பார்த்தவுடன் ஆட்-டோவை விட்டுவிட்டு மணல் கடத்தியவர்கள் தப்பி ஓடினர். மணலுடன் இருந்த மினி ஆட்டோவை போலீசார் பறிமுதல் செய்து, தப்பி ஓடியவர்களை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை