| ADDED : டிச 05, 2025 10:21 AM
குமாரபாளையம்: நாமக்கல் மேற்கு மாவட்டம், அகில இந்திய காங்., கமிட்டியின் தெலுங்கானா மாநிலத்தில் இருந்து வந்திருக்கும் பெல்லையா நாயக், நாமக்கல் மாவட்ட மேலிட பார்வையாளராக உள்ளார். இவர், நேரடியாக வட்டாரம் மற்றும் நகரங்களுக்கு சென்று ஆய்வு செய்து வருகிறார். பரமத்தி வேலுார், திருச்செங்கோடு, குமார பாளையம் சட்டசபை தொகுதிகளில் கடந்த ஐந்து நாட்களாக, வட்டார, நகர பிரதிநிதிகளை நேரில் சந்தித்து கலந்தாய்வு செய்தார். பூத் கமிட்டி அமைத்தல், எஸ்.ஐ.ஆர்., பணிகள் குறித்து கண்காணிக்க வேண்டும், காங்கிரஸ் கட்சியின் ஆட்சி குறித்து எடுத்து பிரசாரம் செய்து, மேலிடம் அறிவிக்கும் வேட்பாளரை வெற்றி பெற வைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். குமாரபாளையம் நகர தலைவர் ஜானகிராமன், நிர்வாகிகள் சிவராஜ், சுப்ரமணி, கோகுல்நாத், சிவராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.