உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / வனப்பகுதியில் அழுகிய ஆண் சடலம் மீட்பு

வனப்பகுதியில் அழுகிய ஆண் சடலம் மீட்பு

நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை ஒன்றியம், ஆயில்பட்டி அடுத்த மாவாறு வனப்பகுதியில் ஆடு மேய்க்க சென்றவர்கள், துர்நாற்றம் வீசுவ-தாக ஆயில்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதைய-டுத்து போலீசார் மாவாறு வனப்பகுதிக்கு சென்று சோதனையிட்-டனர். அங்கு ஒரு மரத்தில் ஆண் சடலம் ஒன்று அழுகிய நிலையில் துாக்கில் தொங்கி கொண்டிருந்தது. ஆயில்பட்டி போலீசார் சடலத்தை மீட்டு சேலம் அரசு மருத்துவம-னைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விசார-ணையில், தம்மம்பட்டியை சேர்ந்த இருளப்பன் மகன் ஆறு-முகம், 60, கடந்த மாதம், 14ம் தேதி முதல் காணவில்லை என்றும் சற்று மனநிலை பாதிக்கப்பட்டிருந்த அவர் வனப்பகு-திக்கு வந்து துாக்கில் தொங்கி இருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும், ஆயில்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை