நாமக்கல்: 'பாச்சல் ஞானமணி கல்லுாரியில், வரும், 15ல், மாவட்ட அளவிலான கல்விக்கடன் முகாம் நடக்கிறது' என, கலெக்டர் உமா தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:நாமக்கல் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி (இந்தியன் வங்கி) சார்பில், கல்வி கடன் முகாம், அனைத்து வங்கிகள் சார்பில், வரும், 15 காலை, 9:00 முதல், பாச்சல் ஞானமணி கல்லுாரியில் நடக்கிறது.ஏற்கனவே, நாமக்கல் பாவை கல்லுாரி, ஞானமணி கல்லுாரி, திருசெங்கோடு விவேகானந்தர் கல்லுாரி, கே.எஸ்.ஆர்., கல்லுாரி மற்றும் கல்வி நிறுவனங்களில் பெறப்பட்ட கல்விக்கடன் விண்ணப்பங்களில், தகுதியான மாணவர்களுக்கு ஒப்புதல் கடிதங்கள் வழங்கப்படும்.மேலும், முகாமில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கல்லுாரிகளில் பயிலும் மாணவர்கள், புதிதாக கல்விக்கடன் பெற விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்ய வசதிகள் செய்யப்பட்டுள்ளன.கல்வி கடனுக்கு இதுவரை விண்ணப்பிக்காத மாணவர்கள், ஆதார் கார்டு, பான் கார்டு மற்றும் கல்வி தொடர்பான ஆவணங்களுடன் கலந்துகொண்டு, தங்கள் விண்ணப்பங்களை www.vidyalakshmi.comஎன்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.பான் கார்டு இல்லாத மாணவர்கள், ஆதார் நகல் மற்றும் 2 பாஸ்போர்ட் அளவு போட்டோக்கள் எடுத்து வந்தால், முகாம் நடக்கும் இடத்திலேயே இ-சேவை மையம் மூலம், பான்கார்டுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.புதிய சேமிப்பு கணக்கு தொடங்கும் வசதி, கடன் தொடர்பான வங்கி உதவி மைய சேவை வசதிகளும், இந்த முகாமில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. முகாமில் பெறப்பட்ட விண்ணப்பங்கள் வங்கி விதிமுறைகளுக்குட்பட்டு பரிசீலனை செய்து, உடனடியாக கல்வி கடன் அனுமதி வழங்கப்படும். மாணவர்கள் மற்றும் பெற்றோர் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.