உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / அரளி பூ விலை உயர்வு விவசாயிகள் மகிழ்ச்சி

அரளி பூ விலை உயர்வு விவசாயிகள் மகிழ்ச்சி

சேந்தமங்கலம், சேந்தமங்கலம் சுற்று வட்டாரத்தில் உள்ள ராமநாதபுரம் புதுார், ராயக்கோட்டை, கருவட்டாறு, ஜூஸ் பேக்டரி, வெண்டாங்கி, வாழவந்தி கோம்பை, காரவள்ளி மற்றும் நடுக்கோம்பை பகுதி யில் பரவலாக அரளி பூ செடிகளை சாகுபடி செய்துள்ளனர்.இந்த பகுதியில் அறுவடை செய்யப்பட்ட பூக்களை சேலம், நாமக்கல் மற்றும் ஆத்துார் பகுதிகளுக்கு விற்பனை செய்ய அனுப்பி வைக்கின்றனர்.கொல்லிமலை அடிவார பகுதி என்பதாலும், பூக்கள் பெரியதாக மற்றும் வாசனை அதிகமாக இருக்கும் காரணத்தால், வியாபாரிகள் நேரடியாக விவசாய தோட்டங்களுக்கு சென்று வாங்கி செல்கின்றனர்.கடந்த சில வாரங்களுக்கு முன்பு சந்தையில், 1 கிலோ அரளி, 140 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஆடி மாதம் தொடங்கி உள்ளதால், பூக்களின் தேவையும் அதிகரித்துள்ளது. தற்போது, 1 கிலோ, 170 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. பூ விலை அதிகரித்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை