உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / அக்ரஹாரம் பகுதியில் மது விற்றவர் கைது

அக்ரஹாரம் பகுதியில் மது விற்றவர் கைது

பள்ளிப்பாளையம்;பள்ளிப்பாளையம் அருகே, அக்ரஹாரம் பகுதியில் ஏராளமான குடியிருப்புகளில் மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் சட்டத்துக்கு விரோதமாக மது விற்பனை செய்வதாக, பள்ளிப்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, நேற்று மாலை போலீசார் சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று கண்காணித்தனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த மாரியப்பன், 49, என்பவர் மது பாட்டிலை விற்பனை செய்து கொண்டிருந்தார். அவரை கைது செய்து, மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ