| ADDED : ஜூன் 05, 2024 12:59 AM
குன்னுார்;குன்னுார் பழ கண்காட்சியில் வடிவமைப்புகளில், பழங்கள் அகற்றப்பட்டு விதை சேகரிக்கவும், இயற்கை உரம் தயாரிக்கவும் கொண்டு செல்லப்பட்டது.நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசனின் நிறைவு நிகழ்ச்சியாக, குன்னுார் சிம்ஸ் பூங்காவில், 3 நாட்கள் நடந்த, 64வது பழ கண்காட்சியில், 5.5 டன் அளவில் அன்னாசி, ஆரஞ்ச், மாதுளம், திராட்சை, மாம்பழம், பலா பழங்களில், 'கிங்காங், வாத்து , டைனோசர்' அலங்கார நுழைவாயில் உட்பட பல்வேறு வடிவமைப்புகள் காட்சிபடுத்தப்பட்டன.ஒரு வாரத்திற்கும் மேல் காட்சிப்படுத்தப்பட்ட 'கிங்காங்' உட்பட வடிவமைப்புகளில் இருந்த பழங்கள் அகற்றப்பட்டு விதைகள் சேகரிக்கவும், இயற்கை உரம் தயாரிக்கவும் அனுப்பப்பட்டது. பயன்படுத்தப்படாத பழங்களை பழரசம் தயாரிக்கவும், எலுமிச்சை ஊறுகாய் தயாரிக்கவும், கொண்டு செல்லப்பட்டது.