உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / கோதண்டராமர் திருக்கோவில் விழா; திரளான பக்தர்கள் பங்கேற்பு

கோதண்டராமர் திருக்கோவில் விழா; திரளான பக்தர்கள் பங்கேற்பு

கோத்தகிரி;கோத்தகிரி அருகே உள்ள பெட்டட்டி ஸ்ரீ கோதண்டராமர் திருக்கோவில் திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.கடந்த, 21ம் தேதி அதிகாலை, 4:00 மணி முதல், 5:00 மணி வரை கும்பாபிஷேகமும், தொடர்ந்து, 7:00 மணி வரை அலங்காரம் மற்றும் ஊர் பூஜை நடந்தது.காலை, 10:00 மணி முதல், பகல் 1:00 மணி வரை பஜனையும், தொடர்ந்து, 3:00 மணிவரை அன்னதானம் வழங்கப்பட்டது.மாலை 6:00 மணி முதல் இரவு, 10:00 மணி வரை, ஸ்ரீ ராமபிரான், லட்சுமணர் மற்றும் சீதா பிராட்டியார் திருவீதி உலா நடந்தது. கிராம வீதிகளில் உலா வந்த வீதி உலா வை, பக்தர்கள் வழிப்பட்டனர்.இரவு, 10:00 மணிக்கு, 'தருமத தாரி' என்ற படுக சமுதாய நாடகம் நடந்தது. 22ம் தேதி, காலை, 7:00 மணிமுதல் 12:00 மணிவரை பட்டாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, 4:00 மணிவரை, அனுமார் வாகன திருவீதி உலா நடந்தது. மாலை, 4:00 மணிக்கு, மக்கள் ஆராதனையும், விழா நிறைவடைந்தது. விழா ஏற்பாடுகளை, ஊர் மக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை