உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / வனத்தில் கட்டப்பட்ட ஹோட்டல் அகற்றம்

வனத்தில் கட்டப்பட்ட ஹோட்டல் அகற்றம்

பந்தலூர்,:பந்தலுார் அருகே பாட்டவயல் சோதனை சாவடியை ஒட்டிய வனப்பகுதியில் சந்தோஷ் என்பவர், வன நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து, ஹோட்டல் கட்டி பல ஆண்டுகளாக நடத்தி வந்தார். இந்த இடம் வனப்பகுதி என்பதால், கட்டடத்தை அகற்ற வனத்துறையினர் அறிவுறுத்தினர். கட்டடத்தை அகற்ற தடை விதிக்க, சென்னை உயர் நீதிமன்றத்தில் சந்தோஷ் வழக்கு தொடர்ந்தார்.ஆனால், வன நிலத்தில் ஆக்கிரமிப்பு செய்து கட்டடம் கட்டியது தவறு என்றும், ஆக்கிரமிப்பு கட்டடத்தை உடனடியாக அகற்ற வேண்டும் எனவும், வனத்துறை மற்றும் வருவாய்த்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்தது.தொடர்ந்து, நேற்று, பந்தலுார் தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி, வன பாதுகாவலர்கள், வருவாய் ஆய்வாளர் தலைமையிலான குழுவினர், ஆக்கிரமிப்பு கடையை அகற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை