உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பைன் சோலையில் திரண்ட சுற்றுலா பயணியர்

பைன் சோலையில் திரண்ட சுற்றுலா பயணியர்

ஊட்டி, : ஊட்டி-கூடலுார் சாலையில் பைன் சோலை உள்ளது. இங்கு வானுயர்ந்த பைன் மரங்கள் அதிக அளவில் உள்ளது. இயற்கை சூழலுடன் பைன் மரங்கள் காட்சி தருவதால் ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் இப்பகுதிக்கு வந்து செல்கின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் வானுயர்ந்த பைன் மரங்களுக்கு இடையே நின்று 'செல்பி மற்றும் போட்டோ' எடுத்து மகிழ்வதுடன் இயற்கை அழகை ரசித்து செல்கின்றனர்.கடந்த ஒரு வாரமாக இப்பகுதிக்கு சுற்றுலா பயணிகளின் வருகை வழக்கத்தை விட அதிகரித்துள்ளது. குறிப்பாக, கேரளா, கர்நாடகா சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை