உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / குன்னுாரில் பரவிய காட்டு தீ; குடங்களில் நீர் கொண்டு சென்று அணைக்கின்றனர் குடங்களில் நீர் கொண்டு சென்று அணைக்கின்றனர்

குன்னுாரில் பரவிய காட்டு தீ; குடங்களில் நீர் கொண்டு சென்று அணைக்கின்றனர் குடங்களில் நீர் கொண்டு சென்று அணைக்கின்றனர்

குன்னுார் : குன்னுாரில், 9வது நாளாக பரவிய காட்டுதீயை கட்டுப்படுத்த குடங்களில் தண்ணீர் எடுத்து சென்று அணைக்கும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டனர். நீலகிரி மாவட்டம், குன்னுார் 'பாரஸ்ட் டேல்' பகுதியில் கடந்த, 12ம் தேதி தேயிலை தோட்டத்தில் வைக்கப்பட்ட தீ, அருகில் இருந்த வனத்திற்கு பரவியது. தீ வைத்த, 4 பேரை வனத்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். தொடர்ந்து, அடுத்த, 2 நாட்கள் கோவை சூலுார் விமான நிலையத்தில் இருந்து வரவழைத்த ஹெலிகாப்டரில் அமைக்கப்பட்ட பக்கெட்டில், ரேலியா அணையில் இருந்து தண்ணீரை எடுத்து வந்து கொட்டி அணைக்கும் பணி நடந்தது. கடந்த, 3 நாட்களாக கோவை, ஆனைமலை, நீலகிரி வனத்துறையினர்; தீயணைப்பு துறையினர், டிராக்டரில் தண்ணீர் டேங்க் இணைத்து, நீண்ட ரப்பர் குழாயின் மூலம் நீரை பாய்ச்சி தீயை அணைத்தனர். நேற்று வனப்பகுதியில் சருகுகள் ஒரு அடி உயரத்திற்கு மேல் குவிந்து கிடந்த நிலையில் அடித்தளத்தில் ஆங்காங்கே தீ பரவியது.தொடர்ந்து, பந்துமி, எடப்பள்ளி, கிளண்டேல் பகுதிகளில் இருந்து டிராக்டர் டேங்கரில் கொண்டு வரப்படும் தண்ணீரை குடங்களில் எடுத்து சென்று தீயில் ஊற்றி அணைக்கும் பணியில், வனத்துறையினர், தீயணைப்பு துறையினர் ஈடுபட்டனர். தொடர்ந்து தீ பரவாமல் இருக்க இரவில் கண்காணிப்பு பணி நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை