உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மாகாளியம்மன் கோவில் திருப்பணிகள் துவக்கம்

மாகாளியம்மன் கோவில் திருப்பணிகள் துவக்கம்

சூலூர்- சூலூர் கலங்கல் ரோடு காட்டூர் மாகாளியம்மன் கோவில் திருப்பணிகள் துவங்கியுள்ளன. சூலூர் கலங்கல் ரோட்டில் உள்ள காட்டூர் மாகாளியம்மன் கோவில் பழமையானது. அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில் திருப்பணிகள் செய்ய அரசு அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து, நேற்று முன்தினம் காலை, 8:00 மணிக்கு கலச பூஜை மற்றும் ஹோமம் நடந்தது. தொடர்ந்து, வைத்தீஸ்வரன் கோவிலில் இருந்து ஆயிரக்கணக்கான பெண்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக காட்டூர் மாகாளியம்மன் கோவிலுக்கு வந்தனர். பின், 12:00 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜை நடந்தது. பாலாலய பூஜை முடிந்து பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை