உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ரூ.17.80 கோடி மதிப்பிலான தேயிலை தூள் தேக்கம் :லாரி ஸ்டிரைக் நீடிப்பால் பாதிப்பு

ரூ.17.80 கோடி மதிப்பிலான தேயிலை தூள் தேக்கம் :லாரி ஸ்டிரைக் நீடிப்பால் பாதிப்பு

குன்னுார்:லாரி ஸ்டிரைக் நீடிப்பதால் நீலகிரியில், 17.80 கோடி ரூபாய் மதிப்பிலான தேயிலை துாள் கொண்டு செல்ல முடியாமல் தேக்கம் அடைந்துள்ளது.நீலகிரி மாவட்டத்தில் முக்கிய தொழிலாக தேயிலை உற்பத்தி உள்ள நிலையில், குன்னுாரில் உள்ள ஏல மையத்தில் தேயிலை துாள் ஏலம் விடப்பட்டு நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது. நாட்டிலேயே, 2வது பெரிய ஏல மையமான குன்னுார் தேயிலை ஏல மையத்தில் தென் மாநிலங்களில் அதிகபட்ச தேயிலை துாள் ஏலம் விடப்படுகின்றன. வாரத்திற்கு, 10 கோடி முதல் 20 கோடி ரூபாய் வரையிலான தேயிலை தூள் ஏலம் விடப்படுகிறது.இந்நிலையில், நேற்று முன்தினம் நடந்த இந்த ஆண்டிற்கான, 3வது தேயிலை ஏலத்தில் 16 லட்சம் கிலோ வந்தது. இதில், 10.46 லட்சம் கிலோ விற்பனையானது. 9.80 கோடி ரூபாய் மதிப்பில் விற்பனையானது. இந்நிலையில், லாரி ஸ்டிரைக் நீடிப்பதால் தேயிலை துாள் கொண்டு செல்ல முடியாமல் தேக்கம் அடைந்துள்ளது.குன்னுார் டிரான்ஸ்போர்ட் சங்க தலைவர் சேகர் கூறுகையில்,''லாரி ஸ்டிரைக் காரணமாக கடந்த வார ஏலத்தில் நடந்த தேயிலை துாள் மட்டும், 8 கோடி ரூபாய் வரையில் தேக்கம் ஏற்பட்டுள்ளது. இது மட்டுமின்றி தற்போது நடந்துள்ள, 3வது ஏலத்தின், 9.80 ரூபய் மதிப்பிலான தேயிலை துாள் தொழிற்சாலைகளில் இருந்து கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ